Basic Information Available In
العربيةBulgarianΕλληνικαEnglishEspañolپارسیFrançaisРусскийTamilUrdu English Français

Click here to quickly exit this site

தாம்பத்திய வன்முறை

தாம்பத்திய வன்முறை கலந்துரையாடப்பட வேண்டிய  ஒரு முக்கிய விடயமாகும் ஏனெனில் இது எவருக்குமே நடக்கலாம்.

கனடாவில் தாம்பத்திய வன்முறை அறிக்கைகளின் விளைவாக கிட்டத்தட்ட 40,000  கைதுகள் நடைபெற்றுள்ளன. மேலும்கியூபெக்கில் 4  இற்கு 1 என்ற அடிப்படையில் யாராவது ஒருவர் போலீஸிற்கு  அழைப்பை மேற்கொண்டு தாம்பத்திய வன்முறை தொடர்பாக புகாரளிக்கின்றனர்அதில் பாதிக்கப்படும் 10 பேரில் 8  பேர் பெண்களாகும்எனினும் கனடாவைப் பொறுத்தளவில் திட்டவட்டமான கணிப்பைப் பெறுவது கடினமாகவுள்ளது. ஏனெனில் தாம்பத்திய வன்முறை தொடர்பாகப் பல குற்றங்கள் போலீஸில் முறைப்பாடு செய்யப்படுவதில்லை.

I. தாம்பத்திய வன்முறை
II. வன்முறைச் சுழற்சி
III. பாதிக்கப்பட்டவருக்கு உதவுதல் மற்றும் உங்களுக்கு நீங்களே உதவுதல்
IV. அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்
கனடா குற்றவியல் கோவையின் இல்லற வன்முறை மற்றும் நீதிமன்றம் நடைமுறை
வளங்கள்
நீதிமன்ற நடைமுறை மற்றும் சாட்சியளித்தல்

குற்றச்செயல் நடைபெறும் போது, பாதிக்கப்பட்டவர் அல்லது போலீஸ் குற்றமிழைத்தவருக்கு எதிராக குற்றச்சாட்டைப் பதிவு செய்யமுடியும். குற்றத்திற்கு எதிராக குற்றப்பதிவு மேற்கொள்ள முடிவு செய்துவிட்டால், அதைப் பற்றிக் குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்வது மிகமுக்கியமானது. நீங்கள் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றச்சாட்டைப் பதிவு செய்யத் தேர்ந்தெடுப்பது வெறுமனே உங்களை அல்லது உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே.

தனி உரிமைகள் சம்மந்தமான மற்றும் குற்றவியல் வழக்கிற்கு இடையேயான நீதிமன்ற நடைமுறையின் வேறுபாடு என்ன?

  • தனி உரிமைகள் சம்பந்தமான  வழக்கு என்றால் (விவாகரத்து அல்லது தடுப்புக் காவல்):
    • உதாரணமாக விவாகரத்து நடைமுறையின் போது ஒரு தடவை தனிநபர் மோதல்கள் எழுந்துள்ளன, இதன்போது உங்களை நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் உங்களுக்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்ய உதவும் வழக்கறிஞருடன் பேசுவதற்குப் பரிந்துரைக்கப்படும். இந்நடைமுறை முழுவதும் உங்களுக்கு உணர்வு ரீதியாக ஆதரவு வழங்குவதற்கு ஒரு சமூக சேவையாளருடன்  பேச முடியும்.
  • இது ஒரு குற்றவியல் வழக்கு என்றால் (உ+ம் தாம்பத்திய அல்லது குடும்ப வன்முறை):
    • போலீசில் முறைப்பாடு செய்து முடிந்தவுடன் உங்கள் வழக்கு, வழக்கறிஞருடன் இணைந்து செல்ல வேண்டுமா என்பதை குற்றவியல் புலன்விசாரனையாளர் முடிவு செய்வார். உங்களுக்குத் தீமை விளைவித்தவருடன் விசாரணையைத் தொடரலாமா, இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் வழக்கறிஞருக்கு உண்டு.
    • உங்கள் வழக்கு விசாரணைக்குச் சென்று விட்டால், நீங்கள் தானாகவே இந்த வழக்கின் முதன்மைச் சாட்சியாகிவிடுவீர்கள். எனினும், உங்களுக்கு சாட்சியளிக்க விருப்பமா, இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் சாட்சியளிக்க தேர்வு செய்தால்,  நீதிமன்றத்தில் அவ்வாறு செய்ய வேண்டும்.
    • ஒருமுறை உங்கள் வழக்கு இந்நிலையை அடைந்ததும், உங்கள் ஆரம்ப முறைப்பாட்டைத் திரும்பப்பெறும் அதிகாரம் சாத்தியமற்றது. வழக்கறிஞர் உங்களுக்குத் தீமை விளைவித்தவரைத் தொடரத் தெரிவு செய்தால், வழக்கு முற்று முழுதாக உங்கள்  கையை விட்டுப்போய்விடும்.

குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கை (அட்டவணை)

JudicialProcessTamil

 

நீதிமன்றத்தில் யார் உள்ளனர் மற்றும் என்ன செய்வார்கள்?

  • நீதிபதி என்ன செய்வார்?
    • நீதிபதி தான் இறுதி முடிவைத் தீர்மானிப்பவராகும். தீர்ப்பு வழங்குமுன் நீதிபதி இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்துக் கேட்டு அதன்பின் உண்மைகளை விளங்கி சட்டத்தைச் செயற்படுத்துவார்.

!: நீதிபதி ஒழுக்கறெித் தரத்திற்கேற்ப ஒருவரது நடத்தையை மதிப்பீடு செய்ய முடியாது மாறாக சட்டதிட்டத்திற்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.  நீதிமன்றத்தில் இருப்பவர்கள்  எவரும் நீதிபதி உட்பட, ஒரு அணுகுமுறை தவறானது அல்லது சரியானது என்று கூறுவதற்கல்ல. ஆனால் சட்டம் அல்லது சட்ட விரோதமானது என்பது மட்டுமே கூற முடியும்.

 

  • முடிசூடிய வழக்கறிஞர்கள் என்ன செய்வார்கள்?
    • முடிசூடிய வழக்கறிஞர்கள் மாநில பிரதிநிதித்துவம் அதே நேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கும். இதன் அர்த்தம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் அமர்ந்திருப்பார்கள் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் நலன்களைப் பிரதிபலிப்பதில்லை. இவர்களுடைய பங்கு மாநில விதிகள், சட்டங்கள் ஒவ்வொரு பக்கமும் மதிக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஒரு நியாயமான விசாரணை கிடைக்கின்றதா என்பதாகும். சுருக்கமாக, குற்றம் சுமத்தப்பட்டவர் சட்டத்தை மீறுவதி முதற்கொண்டு தண்டனை கிடைக்கும் வரை உறுதிசெய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டங்கள் உள்ளதால், இந்த உரிமைகள் வழக்கு விசாரணையின் போது மதிக்கப்படுகின்றதா எனவும் உறுதி செய்ய வேண்டும்.
  • எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன செய்கின்றார்?
    • எதிர்த்தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டப்பட்டவரை பிரதிபலிப்பதோடு அவர் நிரபராதி என நிருபிக்கவும் மற்றும் அவர்  குற்றவாளியென ஆதாரங்களுடன்  கண்டறியப்பட்டால் முடிந்தவரை தண்டனையை குறைக்கவும் முயற்சி செய்வார்.
  • சாட்சியாளர் என்ன செய்வார்?
    • சாட்சியாளர்கள் சாட்சி கூண்டுக்குள் அழைக்கப்பட்டு தங்கள் ஐம்புலன்களாலும் எதை உணர்ந்தனர் என விளக்குமாறு பணிக்கப்படுவார்.  சாட்சிகள் “நான் ஒரு நபர் கூச்சலிட்டதை கேட்டேன்” என்று சொல்ல முடியும். ஏனெனில் அவர் நேரடியாகக் கேட்டுள்ளார். மற்றும் அந்த நபர் கூச்சலிட்டதை கேட்டு இன்னொரு நபர் கூறினார் என்பதல்ல. சாட்சி நடுநிலையானவர் மற்றும் குறிப்பிட்ட நிகழ்வை வெளிச்சத்திற்கு கொண்டுவர உண்மையை மட்டுமே கூறப் பணிக்கப்படுவார்.

 

  • நீதிமன்றச் செய்தியாளர் என்ன செய்வார்?
    • கனடாவில் நியாயமான ஒரு விசாரணையின் உத்தரவாதம் பொதுமக்களின் செயல்முறை உண்மையைச் சார்ந்திருக்கின்றது. ஆகவே நீதிமன்ற அறையில் என்ன நடக்கின்றது என்பதை செய்தியாளர் உடனுக்குடன் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவார். சில சமயங்களில் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தனியுரிமை கருதி பொதுமக்கள் பக்கம் மூடப்பட்டிருக்கும்.

 

  • நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரி என்ன செய்வார்?
    • பாதுகாப்பு அதிகாரி முழு நடவடிக்கையின் போது பாதுகாப்பை உறுதி செய்வார். நீதிமன்ற அறைக்கு முறையற்ற வகையில் நுழைய முற்படுபவர்களை தடுத்தல் அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆக்கிரோசமாக இருந்தால் தலையிட முடியும்.

 

  • நடுவர் என்ன செய்வார்?
    • நடுவர் மக்கள் தொகையின் சீரான தேர்வாகும். குடிமக்களாலான சீரற்ற சனத்தொகையின் தேர்வு மற்றும் தண்டனை ஒரு சமூக முடிவு எனவும் உறுதிப்படுத்துவார். (சமூக மதிப்புகளைப் பிரதிபலிக்கின்றது) அவர்கள் விசாரணை முழுவதும் சமூகமாகி இருப்பார்கள் மற்றும் இருதரப்பு விசாரணை முடிந்தபின்பு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என முடிவு செய்வார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால், நீதிபதி தண்டனையை முடிவு செய்வார்.

 

  • குற்றஞ்சாட்டப்பட்டவர் என்ன செய்வார்?
  • குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணை முழுவதும் சமூகமாகி இருப்பார். அவர்கள் அமைதி காப்பதற்கு உரிமையுண்டு. ஆகையினால் அவர்கள் சாட்சியளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் சாட்சியளிக்க விரும்பினால், நீதிபதி கேட்கும் போது மட்டுமே செய்யமுடியும்.

சாட்சியளிப்பதன் முக்கியத்துவம் என்ன?

  • நீங்கள் நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டிருந்தால் (ஒரு சம்மன் நீதிமன்றத்தில் இருந்து கிடைக்கப்பெற்றால்) சாட்சியளித்தல் கட்டாயமாகின்றது. எப்படியாயினும், உங்களுக்கு சம்மன் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சாட்சியளிக்க விருப்பமா, இல்லையா என்பதைத் தெரிவு செய்யலாம்.
  • நீதிமன்றத்தில் சாட்சியளித்தல் உங்களை நீங்களே  வலுவூட்டும் ஒரு வழி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். அத்தோடு, சாட்சியளிக்கும் சூழ்நிலை உங்களுக்குத் தீமை விளைவித்தவரின் செயற்பாடு தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, அவர் உங்களிடம் இருந்து பறித்துக்கொண்ட அதிகாரங்கள் சிலவற்றை மீளப்பெறுவதற்கான ஒரே வழியுமாகும்.
சாட்சியளிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்ன?நீங்கள் நீதிமன்றத்தில் சாட்சியளிக்கும் போது ஒரு கட்டுப்படுத்தப்படுகின்றது சத்தியப்பிரமாணத்தினால் உண்மையைக் கூறும்படி கட்டுப்படுத்தப்படுகின்றது. நீங்கள் பொய் கூறினால், சட்ட விதிமுறைகளில் பொய்வாக்குமூலம் என்று அழைக்கப்படுவதைச் செய்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் உண்மையைக்  கூறாமல் நீதிமன்றத்தை அவமதிக்கின்றீர்கள் என்று பொருள் (சிறைத்தண்டனை அல்லது அபராதத்துக்கு உட்படும்)
  • உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் ஞாபகம் இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
    • முதலாவதாக, இப்படி  நடந்தால் நீங்கள் பதற்றப்பட வேண்டியதில்லை. அக்கேள்விக்கு பதில் ஞாபகம் இல்லை என்பதை நீதிபதியிடம் கூற முடியும் மற்றும் வழக்கறிஞர் அடுத்த கேள்விக்கும் போக முடியும்.

 

  • உங்களிடம் ஒரு சங்கடமான கேள்வி கேட்கப்பட்டால்?
    • நீதிமன்ற அறையில் எவரும்  உங்களை மதிப்பீடு செய்யவோ அல்லது தர்மசங்கடத்தில் ஆழ்த்தவோ மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். சங்கடமான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் உங்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விபரத்தைக் கேட்டறிந்து உங்கள் நிலைமையை மதிப்பீடு செய்து உங்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவதன் நோக்கமாகும்.
  • உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வி உங்களுக்கு விளங்கவில்லை என்றால்?
    • கேள்வி கேட்டவரை அதை மறுபடியும் கூறுமாறு அல்லது விளங்கப்படுத்துமாறு  கேட்கத் தயங்க வேண்டாம். குறிப்பாக உங்களுக்கு கனடியச் சட்டவிதிமுறைகள் தெரிந்திராத போது, கேள்வி விளங்கவில்லை என்றால் அதில் எந்தவிதமான அவமானமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
  • உங்களிடம் ஒரே நேரத்தில் பல கேள்விகள் கேட்கப்பட்டால்?
    • நீங்கள் அவர்களிடம் கேள்விகளைப் பிரித்து ஒவ்வொன்றாகக் கேட்கும்படியும் நீங்கள் தனித்தனியாக விடையளிப்பதாகவும் கூறலாம். நீங்கள் முடிந்தளவிற்கு உங்களுக்கு யோசிப்பதற்குத் தேவையான நேரத்தை எடுத்து துல்லியமாகப் பதிலளித்தல் முக்கியமானது.

 

  • நான் சாட்சியளித்து முடிந்தபின் என்ன நடக்கும்?
    • நீங்கள் சாட்சியளித்து முடிந்தபின் நடைமுறைகள் விசாரணை காலம் முடியும் வரை செல்லும். நீதிபதி விசாரணையின் போது கேட்டவற்றையெல்லாம் மனதில் வைத்துத் தீர்ப்பு எழுத நேரம் எடுக்கும். உங்கள் வாதத்தை நிரூபித்து நீதிபதியின் கருத்துப்பதிவை ஏற்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பு. ஆகவே சாட்சியளிப்பது மிகவும் முக்கியமானது.  அத்தோடு இது ஒரு வலுவூட்டக் கூடிய அனுபவமுமாகும். உங்களுக்கு தீமை விளைவித்தவரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை வெளிப்படுத்த உங்களுக்கத் தனிப்பட்ட ரீதியாகக் கிடைத்த வாய்ப்பாகும்.